search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டிவனம் அருகே தனியார் பஸ் டிரைவர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
    X

    திண்டிவனம் அருகே தனியார் பஸ் டிரைவர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

    திண்டிவனம் அருகே தனியார் பஸ் டிரைவர் வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டிவன்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள நல்லதம்பி நகரை சேர்ந்தவர் கணேசன். இவர் தனியார் பஸ்சில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

    இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கோவையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். இதை அறிந்த மர்ம மனிதர்கள் நள்ளிரவில் கணேசன் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்பு அவர்கள் பீரோவில் இருந்த நகை-பணத்தை கொள்ளையடித்தனர்.

    அதன்பின்பு கொள்ளையர்கள் அருகில் உள்ள ஓய்வு பெற்ற கிராம அலுவலரான பாண்டுரங்கன் என்பவரது விவசாய நிலத்தில் உள்ள வீட்டுக்கு சென்றனர். அங்கு அவர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து பணம் ஏதும் உள்ளதா? என தேடி பார்த்தனர். அங்கு பணம் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுவிட்டனர்.

    இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் கணேசன் வீட்டு கதவு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் இதுகுறித்து திண்டிவனம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொள்ளை நடந்த கணேசன் வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    மேலும் இதுகுறித்து கோவையில் உள்ள கணேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வந்த பிறகுதான் வீட்டில் எவ்வளவு நகை-பணம் கொள்ளை போனது என்பது தெரியவரும். அவர் உடனடியாக திண்டிவனத்துக்கு வந்து கொண்டிருக்கிறார். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×