search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சூலூர் அருகே இளம்பெண் தற்கொலை
    X

    சூலூர் அருகே இளம்பெண் தற்கொலை

    சூலூர் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூலூர்:

    கோவை சூலூர் அருகே உள்ளது குளத்தூர். இந்த பகுதியை சேர்ந்தவர் சித்ரா (வயது 31). இவருக்கும் தங்கராஜ் என்பவருக்கும் திருமணமானது. கருத்துவேறுபாட்டால் 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து விட்டனர்.

    சித்ராவின் தங்கை மகேஷ். இவர் வேலூர் மாவட்டம் ஆம்பூரில் கணவருடன் வசித்து வருகிறார். மகேசுக்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கோபித்துக்கொண்டு கடந்த 2 நாட்களுக்கு முன்பு குளத்தூரில் உள்ள அக்காள் சித்ரா வீட்டுக்கு வந்தார்.

    நேற்று இரவு சித்ராவுக்கும், மகேசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் சித்ரா கோபித்துக்கொண்டு தனது அறைக்கு சென்று விட்டார். இன்று காலை எழுந்து பார்த்தபோது சித்ரா தூக்கில் பிணமாக தொங்கினார்.

    சூலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×