என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சூலூர் அருகே இளம்பெண் தற்கொலை
சூலூர்:
கோவை சூலூர் அருகே உள்ளது குளத்தூர். இந்த பகுதியை சேர்ந்தவர் சித்ரா (வயது 31). இவருக்கும் தங்கராஜ் என்பவருக்கும் திருமணமானது. கருத்துவேறுபாட்டால் 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து விட்டனர்.
சித்ராவின் தங்கை மகேஷ். இவர் வேலூர் மாவட்டம் ஆம்பூரில் கணவருடன் வசித்து வருகிறார். மகேசுக்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கோபித்துக்கொண்டு கடந்த 2 நாட்களுக்கு முன்பு குளத்தூரில் உள்ள அக்காள் சித்ரா வீட்டுக்கு வந்தார்.
நேற்று இரவு சித்ராவுக்கும், மகேசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் சித்ரா கோபித்துக்கொண்டு தனது அறைக்கு சென்று விட்டார். இன்று காலை எழுந்து பார்த்தபோது சித்ரா தூக்கில் பிணமாக தொங்கினார்.
சூலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்