search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுற்றுலா பயணியிடம் லஞ்சம் கேட்ட சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
    X

    சுற்றுலா பயணியிடம் லஞ்சம் கேட்ட சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

    கொடைகானலில் சுற்றுலா பயணியிடம் ரூ.2000 லஞ்சம் கேட்ட சப்-இன்ஸ்பெக்டருக்கு மாநில மனித உரிமை ஆணையம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தது.
    திண்டுக்கல்:

    கேரளாவை சேர்ந்தவர் பைசல்ரகுமான். இவர் கடந்த 2016-ம் ஆண்டு குடும்பத்துடன் கொடைக்கானல் வந்தார். அப்போது பல்வேறு இடங்களை சுற்றிபார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் தனது குடும்பத்துடன் சென்றார்.

    அப்போது போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அவரை வழிமறித்தார். மோட்டார் வாகனத்திற்குரிய ஆவணங்களை பைசல் ரகுமானிடம் கொடுத்தார். உடனே அவரும் உரிய ஆவணங்களை கொடுத்தார்.

    ஆனால் சப்-இன்ஸ்பெக்டர் போஸ் உங்களது வாகனத்தில் மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் காலாவதியாகிவிட்டது. எனவே ரூ.2000 வழங்கவேண்டும் என்று தெரிவித்தார். அப்போது பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டதால் சப்-இன்ஸ்பெக்டர் அவரை விடுவித்தார்.

    இதுகுறித்து பைசல்ரகுமான் சென்னையில் உள்ள மாநிலமனித உரிமை ஆணையத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவில் சப்-இன்ஸ்பெக்டர் போஸ் என்னை வழிமறித்து லஞ்சம் கேட்டு அவமதித்தார். இதனால் எனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனைதொடர்ந்து தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்றேன்.

    தேவையில்லாமல் எனக்கு ரூ.2லட்சம் வரை செலவாகிவிட்டது. எனவே சம்பந்தப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் போஸ் மீது ஒழுங்கு நடவடிக்கையும், ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    மனுவை விசாரித்த நீதிபதி துரைஜெயசந்திரன் சாட்சியம் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும்போது சப்-இன்ஸ்பெக்டர் போஸ் மனிதஉரிமை மீறலில் ஈடுபட்டிருப்பது நிரூபணமானது. இதற்காக சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.50ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.

    இந்த தொகையை மனுதாரருக்கு தமிழக அரசு ஒரு மாதத்திற்குள் வழங்கிவிட்டு சப்-இன்ஸ்பெக்டரின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்துகொள்ளலாம் என உத்தரவிட்டார். #tamilnews
    Next Story
    ×