என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிங்கம்புணரியில் அதிகாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை
Byமாலை மலர்4 Dec 2018 10:12 AM GMT (Updated: 4 Dec 2018 10:12 AM GMT)
சிங்கம்புணரியில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
சிங்கம்புணரி:
சிங்கம்புணரி கீழைக்காடு சாலை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அதிகாரி. உடல்நலம் பாதிக்கப்பட்ட சுப்பிரமணியன் சிகிச்சை பெறுவதற்காக மதுரைக்கு சென்றார். இதனை அறிந்த யாரோ மர்ம மனிதர்கள் சுப்பிரமணியன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்த பீரோக்களை உடைத்து அதிலிருந்த 15 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ. 10 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து சிங்கம்புணரி போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் கோடீஸ்வரன் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார். சுப்பிரமணியன் மதுரைக்கு சென்றிருப்பதை அறிந்தே கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
சிங்கம்புணரி கீழைக்காடு சாலை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அதிகாரி. உடல்நலம் பாதிக்கப்பட்ட சுப்பிரமணியன் சிகிச்சை பெறுவதற்காக மதுரைக்கு சென்றார். இதனை அறிந்த யாரோ மர்ம மனிதர்கள் சுப்பிரமணியன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்த பீரோக்களை உடைத்து அதிலிருந்த 15 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ. 10 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து சிங்கம்புணரி போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் கோடீஸ்வரன் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார். சுப்பிரமணியன் மதுரைக்கு சென்றிருப்பதை அறிந்தே கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X