என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஊத்துக்கோட்டை அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதல் - தொழிலாளி பலி
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள வெங்கடாபுரம் கிராமம் ஆதி திராவிட காலனி கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது 24), கூலித் தொழிலாளி. இவரது மனைவி அமராவதி (21), மகன் கவுதம் (3).
மோகன் மனைவி, மகனுடன் மோட்டார் சைக்கிளில் கட்சூருக்கு புறப்பட்டார். வெங்கடாபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீர் என்று கட்டுப்பாடு இழந்த மோட்டார் சைக்கிள் சாலை ஒரமாக உள்ள மின் கம்பத்தில் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு கட்சூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையில் அனுமத்தித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி மோகன் உயிரிழந்தார். அவரது மனைவி அமராவதி, மகன் கவுதம் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பென்னாலூர் பேட்டை இன்ஸ்பெக்டர் பாலு விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்