search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு முதியவர் பலி
    X

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு முதியவர் பலி

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு முதியவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #SwineFlu

    கோவை:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள எருக்கலாம்பாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 65). இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.

    இதற்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை. இதனையடுத்து கடந்த 24-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

    டாக்டர்கள் கந்தசாமியின் ரத்தத்தை பரிசோதனை செய்த போது அவருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து கந்தசாமியை டாக்டர்கள் சிறப்பு வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை கந்தசாமி பரிதாபமாக இறந்தார்.

    தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு 23 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 4 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 63 பேரும் என மொத்தம் 90 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். #SwineFlu

    Next Story
    ×