search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை
    X

    திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை

    திண்டுக்கல் நகர் பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்தது. #Rain

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக கடும் வறட்சி நீடித்தது. இதனால் குடிநீருக்கு கூட மக்கள் கடும் இன்னலை சந்தித்தனர்.

    ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கைகொடுத்ததால் அணைகளின் நீர்மட்டம் கனிசமாக உயர்ந்துள்ளது. அதன்பின்னர் மழை பெய்ய வில்லை. எனவே தென்மேற்கு பருவமழை பெய்து விவசாயம் செழிக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

    தென்மேற்கு பருவமழையும் கைகொடுக்க வில்லை. கடந்த 16-ந் தேதி கஜாபுயல் வீசிய தினத்தன்று கடுமையான மழை கொட்டி தீர்த்தது.

    இந்த மழையால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்தது. அதன்பின்னர் மழை பெய்ய வில்லை. தற்போது வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் இன்று காலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது.

    கொடைக்கானலில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. திண்டுக்கல் நகர் பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்தபடி காணப்பட்டது. இதேபோல பழனி, நத்தம், வத்தலக்குண்டு மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் மழை பெய்தது. #Rain

    Next Story
    ×