என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்
Byமாலை மலர்4 Dec 2018 5:25 AM GMT (Updated: 4 Dec 2018 8:18 AM GMT)
தமிழகம், புதுவையில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். #TNRains #chennaiRains #IMD
சென்னை:
தென் மேற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் கடலோர பகுதிகளில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது.
சென்னையில் நேற்று மாலை முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இன்று காலையிலும் மழை கொட்டியது. இதே போல் காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும், புதுக்கோட்டை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
தமிழகம், புதுவையில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அவர் கூறிய தாவது:-
இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம்-புதுவையில் கடலோர பகுதிகளில் பரவலாகவும், உள்பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்துள்ளது.
அதிகபட்சமாக பொன்னேரியில் 13 செ.மீ. மழையும், சோழவரத்தில் 8 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.
அடுத்த 2 நாட்களை பொறுத்தவரை தமிழகம்- புதுவையில் அனேக இடங்களில் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும், கடலோர மாவட்டங்களில் கனமழையும் நீடிக்கும்.
சென்னையில் இடைவெளி விட்டு மிதமான மழை பெய்யும், ஒருசில நேரங்களில் கனமழை பெய்யும்.
இவ்வாறு அவர் கூறினார். #TNRains #chennaiRain #IMD
தென் மேற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் கடலோர பகுதிகளில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது.
சென்னையில் நேற்று மாலை முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இன்று காலையிலும் மழை கொட்டியது. இதே போல் காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும், புதுக்கோட்டை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
தமிழகம், புதுவையில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அவர் கூறிய தாவது:-
குமரி கடல் முதல் தெற்கு ஆந்திர கடற்கரை வரை தமிழக கடற்கரை பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.
அதிகபட்சமாக பொன்னேரியில் 13 செ.மீ. மழையும், சோழவரத்தில் 8 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.
அடுத்த 2 நாட்களை பொறுத்தவரை தமிழகம்- புதுவையில் அனேக இடங்களில் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும், கடலோர மாவட்டங்களில் கனமழையும் நீடிக்கும்.
சென்னையில் இடைவெளி விட்டு மிதமான மழை பெய்யும், ஒருசில நேரங்களில் கனமழை பெய்யும்.
இவ்வாறு அவர் கூறினார். #TNRains #chennaiRain #IMD
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X