search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் பரவலாக மழை
    X

    புதுவையில் பரவலாக மழை

    புதுவையில் நேற்று மாலை மழை பரவலாக பெய்தது. இதனால் நகர் பகுதி குளிர்ச்சியாக காணப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவையில் நேற்று காலை முதல் வெயில் அதிகம் இல்லாமல் மேகமூட்டமாக காணப்பட்டது. மாலை 4 மணியளவில் லேசாக சாரலுடன் மழை பெய்தது. தொடர்ந்து விட்டு விட்டு இந்த மழை நீடித்தது. மாலை 6½ மணியளவில் பலத்த மழை கொட்டியது. சுமார் ½ மணி நேரம் இது நீடித்தது.அதன்பிறகு தூறலாக மாறியது. தொடர்ந்து மேகமூட்டமாகவே இருந்தது. இதனால் நகர் பகுதி குளிர்ச்சியாக காணப்பட்டது.

    புறநகர் பகுதியான வில்லியனூர், திருபுவனை, திருக்கனூர், அரியாங்குப்பம், பாகூர், காலாப்பட்டு, வானூர் உள்ளிட்ட பல இடங்களில் நேற்று மாலை மழை பெய்தது. இதனால் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் அவதிக்குள்ளானார்கள்.

    Next Story
    ×