search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வில்லியனூர் அருகே விடுதலை சிறுத்தை நிர்வாகியை தாக்கிய வாலிபர் கைது
    X

    வில்லியனூர் அருகே விடுதலை சிறுத்தை நிர்வாகியை தாக்கிய வாலிபர் கைது

    வில்லியனூர் அருகே விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடிவருகிறார்கள்.

    புதுச்சேரி:

    திருச்சியில் விடுதலை சிறுத்தை கட்சி மாநாடு வருகிற 10-ந்தேதி நடக்கிறது. இதையடுத்து விடுதலை சிறுத்தை கட்சியினர் புதுவையில் பல்வேறு இடங்களில் சுவர் விளம்பரம் செய்து வருகிறார்கள். அதுபோல் பிச்சைவீரன்பேட் வடக்கு வாய்க்கால் தெருவை சேர்ந்த விடுதலை சிறுத்தைகட்சியின் ஓவியர்அணி செயலாளர் அங்காளன் (வயது34). என்பவர் சம்பவத்தன்று பத்துகண்ணு- ஊசுட்டேரி சாலையில் சுவர் விளம்பரம் எழுதி கொண்டு இருந்தார்.

    அப்போது கணுவாய்ப்பேட்டையை சேர்ந்த அய்யப்பன் உள்ளிட்ட 3 பேர் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் அங்காளனுடன் தகராறு செய்து சுவர் விளம்பரம் செய்ய வைத்திருந்த பெயிண்டை கீழே கொட்டி சேதப்படுத்தினர். மேலும் இதனை தட்டிக்கேட்ட அங்காளனை அவர்கள் தாக்கிவிட்டு தப்பி ஓடி விட்டனர்.

    இதுகுறித்து அங்காளன் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து அய்யப்பனை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×