என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வில்லியனூர் அருகே விடுதலை சிறுத்தை நிர்வாகியை தாக்கிய வாலிபர் கைது
புதுச்சேரி:
திருச்சியில் விடுதலை சிறுத்தை கட்சி மாநாடு வருகிற 10-ந்தேதி நடக்கிறது. இதையடுத்து விடுதலை சிறுத்தை கட்சியினர் புதுவையில் பல்வேறு இடங்களில் சுவர் விளம்பரம் செய்து வருகிறார்கள். அதுபோல் பிச்சைவீரன்பேட் வடக்கு வாய்க்கால் தெருவை சேர்ந்த விடுதலை சிறுத்தைகட்சியின் ஓவியர்அணி செயலாளர் அங்காளன் (வயது34). என்பவர் சம்பவத்தன்று பத்துகண்ணு- ஊசுட்டேரி சாலையில் சுவர் விளம்பரம் எழுதி கொண்டு இருந்தார்.
அப்போது கணுவாய்ப்பேட்டையை சேர்ந்த அய்யப்பன் உள்ளிட்ட 3 பேர் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் அங்காளனுடன் தகராறு செய்து சுவர் விளம்பரம் செய்ய வைத்திருந்த பெயிண்டை கீழே கொட்டி சேதப்படுத்தினர். மேலும் இதனை தட்டிக்கேட்ட அங்காளனை அவர்கள் தாக்கிவிட்டு தப்பி ஓடி விட்டனர்.
இதுகுறித்து அங்காளன் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து அய்யப்பனை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்