search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கள்ளச்சாவி தயாரித்து காரை திருடி விற்ற 3 பேர் கைது
    X

    கள்ளச்சாவி தயாரித்து காரை திருடி விற்ற 3 பேர் கைது

    ராயபுரம் கள்ளச்சாவி தயாரித்து காரை திருடி விற்ற 3 பேரை கைது செய்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயபுரம்:

    ராயபுரம் ராமநாராயணன் தெருவை சேர்ந்தவர் அல்லிமுத்து. கார் வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இவரிடம் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மண்ணடியை சேர்ந்த சித்திக் என்பவர் காரை வாடகைக்கு எடுத்து சென்று திருப்பி ஒப்படைத்து விட்டார்.

    இந்த நிலையில் அல்லி முத்து வீட்டு முன்பு நிறுத்தியிருந்த கார் திடீரென மாயமானது. போலீசார் விசாரணையில் சித்திக், கள்ளச்சாவி தயாரித்து காரை திருடி திருவனந்தபுரத்தில் விற்றது தெரிய வந்தது. இதையடுத்து சித்திக், அவரது நண்பர்கள் அனீஸ், பத்மாபதி ஆகிய 3 பேரை கைது செய்தனர். கார் மீட்கப்பட்டது. #tamilnews
    Next Story
    ×