என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பழனி பகுதியில் போலியான 5 ரூபாய் நாணயங்கள் புழக்கம்
Byமாலை மலர்3 Dec 2018 10:01 AM GMT
பழனி பகுதியில் 5 ரூபாய் போலி நாணயங்களை புழக்கத்தில் விடுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறு, குறு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழனி:
பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சிறு, குறு வியாபாரிகள் அதிக அளவில் உள்ளனர். பேன்சி மற்றும் மளிகை பொருட்கள், புத்தகம், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அவர்கள் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த கடைகளுக்கு வரும் சிலர் 5 ரூபாய் நாணயங்களை கொடுத்துவிட்டு பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். விற்பனையில் கவனம் செலுத்தும் வியாபாரிகளும் அந்த நாணயத்தின் வடிவம், எடையை கருத்தில் கொண்டு 5 ரூபாய் தான் என நினைத்து வாங்கிக்கொண்டு பொருட்களையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு கொடுத்துவிடுகின்றனர்.
அதன் பின்னர் நாணயங்களை கணக்கெடுக்கும் போது தான், சிலர் கொடுத்த 5 ரூபாய் நாணயங்களில் பல போலியானது என்பது அவர்களுக்கு தெரிய வருகிறது. இதனால் அதிர்ச்சியடையும் வியாபாரிகள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து பழனியை சேர்ந்த வியாபாரிகள் கூறுகையில், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட 50 பைசா நாணயங்கள் தற்போது செல்லாதவை ஆகும்.
அந்த நாணயங்களின் வடிவம் தற்போது உள்ள 5 ரூபாய் நாணயங்கள் போன்று தான் இருக்கும். ஆனால் அவற்றின் தடிமன் குறைவாக இருக்கும். ஆனால் சில மோசடி நபர்கள் 50 பைசா நாணயங்கள் 2-ஐ சிங்கமுக தலைகள் தெரியும்படி இணைத்து ஒட்டிவிடுகின்றனர்.
பின்னர் அந்த நாணயங்களை எங்களிடம் கொடுத்து பொருட்களை வாங்கிச்செல்கின்றனர். அதனை பார்க்கும் எவரும் அது போலியான 5 ரூபாய் என்பதை உடனடியாக கண்டுபிடிக்க முடியாது. நாணயத்தை நன்றாக சரிபார்த்தால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.
இதனால் சிறு, குறு வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதுபோன்று போலி நாணயங்களை புழக்கத்தில் விடுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சிறு, குறு வியாபாரிகள் அதிக அளவில் உள்ளனர். பேன்சி மற்றும் மளிகை பொருட்கள், புத்தகம், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அவர்கள் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த கடைகளுக்கு வரும் சிலர் 5 ரூபாய் நாணயங்களை கொடுத்துவிட்டு பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். விற்பனையில் கவனம் செலுத்தும் வியாபாரிகளும் அந்த நாணயத்தின் வடிவம், எடையை கருத்தில் கொண்டு 5 ரூபாய் தான் என நினைத்து வாங்கிக்கொண்டு பொருட்களையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு கொடுத்துவிடுகின்றனர்.
அதன் பின்னர் நாணயங்களை கணக்கெடுக்கும் போது தான், சிலர் கொடுத்த 5 ரூபாய் நாணயங்களில் பல போலியானது என்பது அவர்களுக்கு தெரிய வருகிறது. இதனால் அதிர்ச்சியடையும் வியாபாரிகள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து பழனியை சேர்ந்த வியாபாரிகள் கூறுகையில், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட 50 பைசா நாணயங்கள் தற்போது செல்லாதவை ஆகும்.
அந்த நாணயங்களின் வடிவம் தற்போது உள்ள 5 ரூபாய் நாணயங்கள் போன்று தான் இருக்கும். ஆனால் அவற்றின் தடிமன் குறைவாக இருக்கும். ஆனால் சில மோசடி நபர்கள் 50 பைசா நாணயங்கள் 2-ஐ சிங்கமுக தலைகள் தெரியும்படி இணைத்து ஒட்டிவிடுகின்றனர்.
பின்னர் அந்த நாணயங்களை எங்களிடம் கொடுத்து பொருட்களை வாங்கிச்செல்கின்றனர். அதனை பார்க்கும் எவரும் அது போலியான 5 ரூபாய் என்பதை உடனடியாக கண்டுபிடிக்க முடியாது. நாணயத்தை நன்றாக சரிபார்த்தால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.
இதனால் சிறு, குறு வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதுபோன்று போலி நாணயங்களை புழக்கத்தில் விடுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X