search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராணிப்பேட்டை அருகே சென்னை சொகுசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது- 37 பேர் உயிர் தப்பினர்
    X

    ராணிப்பேட்டை அருகே சென்னை சொகுசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது- 37 பேர் உயிர் தப்பினர்

    வாலாஜா அருகே சொகுசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததில் அதிர்ஷ்டவசமாக 37 பேர் உயிர் தப்பினர்.

    வாலாஜா:

    பெங்களூருவில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை சொகுசு பஸ் புறப்பட்டது. டிரைவர் உமேஷ் (வயது 46). என்பவர் ஓட்டிவந்தார். கண்டக்டராக மோகன் (57). என்பவர் உள்பட 37 பயணிகள் இருந்தனர்.

    ராணிப்பேட்டை அருகே உள்ள காரை என்ற இடத்தில் பஸ் சென்ற போது லாரி ஒன்று பஸ்சை முந்தி சென்றது. இதனால் பஸ் டிரைவர் உமேஷ் பிரேக் போட்டுள்ளார். அப்போது பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இதில் கண்டக்டர் மோகன் காயமடைந்தார். பயணிகள் 37 பேர் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயமின்றி உயிர் தப்பினர். இது குறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.

    காயமடைந்த மோகனை வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் பயணிகளை மாற்று பஸ் மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    Next Story
    ×