search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தருமபுரி உழவர் சந்தையில் காய்கறிகளின் வரத்து அதிகரிப்பால் விலை குறைவு
    X

    தருமபுரி உழவர் சந்தையில் காய்கறிகளின் வரத்து அதிகரிப்பால் விலை குறைவு

    தருமபுரி உழவர் சந்தையில் காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. தக்காளி 1 கிலோ ரூ.9-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    தருமபுரி:

    தருமபுரி 4 ரோட்டில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் அமைந்துள்ளது உழவர் சந்தை. இங்கு காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. தற்போது மழைகாலம் நிலவி வருவதால் தருமபுரி பல பகுதிகளில் மழை நன்றாக பெய்து வருகிறது. இதனால் விவசாயம் செழித்து காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளது. எனவே காய்கறிகளின் விலை சற்று குறைந்துள்ளது.

    காய்கறிகளின் விலை வருமாறு:-

    காய்கறிகளின் அதிக பட்ச விலையாக 1 கிலோ பீன்ஸ் ரூ.44-க்கும், அவரைக்காய் 1 கிலோ ரூ.30-க்கும், கேரட் 1 கிலோ ரூ.36-க்கும், தக்காளி 1 கிலோ ரூ.9-க்கும், முறுங்கைகாய் 1 கிலோ ரூ.100-க்கும், வெண்டைக்காய் 1 கிலோ ரூ.24-க்கும், பீட்ருட் 1 கிலோ ரூ.22-க்கும், பீர்க்கங்காய் 1 கிலோ ரூ.30-க்கும், சுரைக்காய் 1 கிலோ ரூ.10-க்கும், கத்தரிக்காய் 1 கிலோ ரூ.26-க்கும் மற்றும் பூசணிக்காய் 1 கிலோ ரூ.12-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
    Next Story
    ×