search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தற்கொலை செய்த முதியவர் அடையாளம் தெரிந்தது
    X

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தற்கொலை செய்த முதியவர் அடையாளம் தெரிந்தது

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தற்கொலை செய்த முதியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்தவர் ஓசூரை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.
    ஒகேனக்கல்

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் முதலைப்பண்ணை அருகே நேற்று முதியவர் ஒருவர் உடல் கரை ஒதுங்கியது. இதனை பார்த்து அந்த பகுதியில் குளிக்க வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து ஒகேனக்கல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று முதியவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்த முதியவர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்துள்ள மத்திகிரி பகுதியை சேர்ந்த அன்னியப்பா (வயது85) என்பதும், அவர் காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து முதியவர் உடலை பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×