search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லையில் குடும்ப தகராறில் மகனை அரிவாளால் வெட்டிய தந்தை
    X

    நெல்லையில் குடும்ப தகராறில் மகனை அரிவாளால் வெட்டிய தந்தை

    நெல்லையில் குடும்ப தகராறில் மகனை அரிவாளால் வெட்டிய தந்தையை போலீசார் தேடி வருகிறார்கள்.

    நெல்லை:

    நெல்லை கொக்கிரகுளம் தொல்காப்பியர் தெருவை சேர்ந்தவர் பிச்சையா பாண்டியன் (வயது45). இவர் ஐகிரவுண்டில் இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் கருப்பசாமி (24), கூலித்தொழிலாளி. தந்தை-மகனுக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது.

    சம்பவத்தன்று கருப்பசாமி வீட்டில் இருந்த போது அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது கருப்பசாமி தந்தையை திட்டினாராம். இதனால் ஆத்திரம் அடைந்த பிச்சையா பாண்டியன், கருப்பசாமியை அரிவாளால் வெட்டினார். இதில் காயம் அடைந்த கருப்பசாமி சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுபற்றி பாளை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பிச்சையா பாண்டியனை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×