search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆரணியில் பெட்ரோல் பங்கில் நூதன முறையில் கொள்ளை
    X

    ஆரணியில் பெட்ரோல் பங்கில் நூதன முறையில் கொள்ளை

    ஆரணியில் பெட்ரோல் பங்கில் சில்லரை கேட்பது போல் நூதன முறையில் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆரணி:

    ஆரணி சுற்றியுள்ள பகுதியில் சுமார் 20  க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்க்குகள் இயங்கி வருகின்றன. அவற்றில் கடந்த 1 மாதம் காலமாக பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் சிலர் சில்லரை கேட்பது போல் நூதன முறையில் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

    இது சம்மந்தமாக ஆரணி நகர மற்றும் கிராமிய போலீசாருக்கு பல புகார்கள் வந்தன. இந்நிலையில் ஆரணி திருவண்ணாமலை சாலை முள்ளிபட்டு கூட்ரோடு அருகில் உள்ள பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க்கில் நேற்று முன்தினம் ஒரு மர்மநபர் வந்து பெட்ரோல் பங்க் மேலாளர் பரதனிடம் சில்லரை கேட்பது போல் நூதன முறையில் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார்.

    இது குறித்து பெட்ரோல் பங்க் மேலாளர் ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்க வந்து பெட்ரோல் பங்க் சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×