என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கஜா புயல் பாதிப்புகள் குறித்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவேன்- கனிமொழி
Byமாலை மலர்2 Dec 2018 7:01 AM GMT (Updated: 2 Dec 2018 7:01 AM GMT)
தமிழகத்தில் புயல் பாதித்த 12 மாவட்டங்களுக்கு போதிய நிதி அளிக்காதது வேதனைக்குரியது என்றும் இப்பிரச்சனை குறித்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் என்றும் கனிமொழி தெரிவித்தார். #DMK #Kanimozhi #GajaCyclone
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. இன்று நெல்லை வந்தார். தாழையூத்து தனியார் விருந்தினர் மாளிகையில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கஜா புயல் பாதிப்புகள் குறித்து முழு அளவில் தமிழக அரசு ஆய்வு செய்யவில்லை. தமிழக அரசிற்கே பாதிப்புகளுக்கான முழு அளவீடுகள் தெரியவில்லை. உண்மை நிலையை மத்திய அரசுக்கு எடுத்து சொல்லவில்லை. எதிர்த்து கேள்வி கேட்க முடியாமல் பதவிகளை காப்பாற்றி கொள்ளும் நிலையிலேயே தமிழக அரசு செயல்படுகிறது.
சிலை அமைப்பதற்கு 3000 கோடி செலவு செய்யும் மத்திய அரசு தமிழகத்தில் புயல் பாதித்த 12 மாவட்டங்களுக்கு போதிய நிதி அளிக்காதது வேதனைக்குரியது. இந்த பிரச்சினை குறித்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து கேரள கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவது குறித்து கனிமொழி எம்.பி.யிடம் கேட்டபோது, ‘கேரள கழிவுகள் மட்டுமல்ல ஒட்டுமொத்த உலக நாடுகளின் கழிவுகளும் இந்தியாவில் வந்துதான் கொட்டப்படுகின்றன’ என்றார். #DMK #Kanimozhi #GajaCyclone
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. இன்று நெல்லை வந்தார். தாழையூத்து தனியார் விருந்தினர் மாளிகையில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 2008-ம் ஆண்டில் தி.மு.க. தலைவர் கலைஞர் கொண்டுவந்த அரசாணையின் படி இரண்டு வருடம் பணிபுரிந்த மாற்றுத்திறனாளிகளை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்றார். ஆனால் இப்போதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பணி நியமனம் செய்யப்படாமல் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு பணி நிரந்தர ஆணை வழங்காதது குறித்து முதலில் அமைச்சர் சரோஜா பேச வேண்டும்.
சிலை அமைப்பதற்கு 3000 கோடி செலவு செய்யும் மத்திய அரசு தமிழகத்தில் புயல் பாதித்த 12 மாவட்டங்களுக்கு போதிய நிதி அளிக்காதது வேதனைக்குரியது. இந்த பிரச்சினை குறித்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து கேரள கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவது குறித்து கனிமொழி எம்.பி.யிடம் கேட்டபோது, ‘கேரள கழிவுகள் மட்டுமல்ல ஒட்டுமொத்த உலக நாடுகளின் கழிவுகளும் இந்தியாவில் வந்துதான் கொட்டப்படுகின்றன’ என்றார். #DMK #Kanimozhi #GajaCyclone
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X