search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கன்னியாகுமரியில் சீசன் கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு
    X

    கன்னியாகுமரியில் சீசன் கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

    கன்னியாகுமரியில் சபரிமலை சீசனை யொட்டி 500-க்கும் மேற்பட்ட சீசன் கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் சபரிமலை சீசனை யொட்டி 500-க்கும் மேற்பட்ட சீசன் கடைகள் திறக்கப்பட்டு உள்ளன.

    சபரிமலை பக்தர்கள் பலரும் தற்போது கன்னியாகுமரி வரத்தொடங்கி உள்ளனர். அவர்கள் சீசன் கடைகளில் விற்கப்படும் பொருள்கள் பல காலாவதியாகி இருப்பதாகவும், அதனை விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் கொடுத்தனர்.

    இது குறித்து மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே கன்னியாகுமரியில் உள்ள சீசன் கடைகளில் ஆய்வு நடத்த உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    அதன்படி குமரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி கருணாகரன் தலைமையில் வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பிரவின் ரகு, சிதம்பர தாணுபிள்ளை, கிளாட்சன், நாகராஜன், சண்முகசுந்தரம் ஆகியோர் இன்று கன்னியாகுமரி சீசன் கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர்.

    சன்செட் பாயின்ட், கடற்கரை சாலைகளில் உள்ள கடைகளில் இந்த ஆய்வு நடந்தது. அங்கிருந்த பொருட்களையும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    இதில் பல கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள், தின்பண்டங்கள் மற்றும் உணவு பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவை அனைத்தையும் அதிகாரிகள் கைப்பற்றி தரையில் கொட்டி அழித்தனர்.

    மேலும் தரமற்ற உணவு பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுபோல அதிகாரிகளின் ஆய்வு தொடர்ந்து நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். #tamilnews
    Next Story
    ×