search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எட்டயபுரத்தில் கணவன் மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றிய மனைவி
    X

    எட்டயபுரத்தில் கணவன் மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றிய மனைவி

    எட்டயபுரத்தில் அ.ம.மு.க. நிர்வாகி மீது அவரது மனைவி கொதிக்கும் எண்ணையை ஊற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    எட்டயபுரம்:

    எட்டயபுரம் கோட்டை மேலத்தெருவை சேர்ந்தவர் முனியசாமி (வயது 48). இவர் அப்பகுதியில் ஜவுளிக்கடை வைத்து நடத்தி வருகிறார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர செயலாளராகவும் இருந்து வருகிறார்.

    இவரது மனைவி மீனாட்சி(40). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 29-ந் தேதி அதிகாலை மீனாட்சி சமைத்து கொண்டிருந்தார். அப்போது கணவன்- மனைவிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆத்திரம் அடைந்த மீனாட்சி சமைத்து கொண்டிருந்த கொதிக்கும் எண்ணையை எடுத்து முனியசாமி மீது ஊற்றியுள்ளார்.

    இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு கோவில்பட்டி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த எட்டயபுரம் போலீசார் மீனாட்சியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×