search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பெண் பலி- ஆண் குழந்தை மீட்பு
    X

    ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பெண் பலி- ஆண் குழந்தை மீட்பு

    ஈரோடு அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண் பலியான சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே உள்ள காடப்பநல்லூரை அடுத்த குதிரைக்கல்மேட்டை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் முருகன் (வயது 22).

    இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நிவிதா (21) என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. முருகனை நிவிதா 2-வது திருமணம் செய்து கொண்டார்.

    இந்த நிலையில் நிவிதா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவர் பிரசவ சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    அவருக்கு ஆபரே‌ஷன் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் அன்று இரவு கிரிஜா பரிதாபமாக இறந்தார். இது குறித்து அம்மாபேட்டை போலீசில் முருகன் புகார் செய்துள்ளார்.

    தனது மனைவி மரணம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் அவர் கூறி உள்ளார். #tamilnews
    Next Story
    ×