search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆண்டிப்பட்டி அருகே வீடு புகுந்து பெண்ணை மிரட்டியவர் கைது
    X

    ஆண்டிப்பட்டி அருகே வீடு புகுந்து பெண்ணை மிரட்டியவர் கைது

    ஆண்டிப்பட்டி அருகே வீடு புகுந்து தனியாக இருந்த பெண்ணை மிரட்டியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேனி:

    ஆண்டிப்பட்டி அருகே கடமலைக்குண்டு சீனிநாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி மனைவி பாப்பம்மாள் (வயது 35). இவருக்கு எதிர் வீட்டில் வசிப்பவர் சரவணன் (23). சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த பாப்பம்மாளிடம் சரவணன் கையை பிடித்து இழுத்து தகராறு செய்துள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த பாப்பம்மாள் சத்தம் போட்டார். இதனைத் தொடர்ந்து சரவணன் இந்த வி‌ஷயத்தை வெளியில் கூறினால் கொன்று விடுவதாக மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இது குறித்து கடமலைக்குண்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.

    தேவதானப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் அங்கம்மாள் (40). இவரது உறவினர் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றார். அப்போது டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்த பிச்சை முத்து, ஆனந்தன், முத்தாயி ஆகியோர் அங்கம்மாளை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இது குறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் அங்கம்மாள் புகார் அளித்தார். எஸ்.பி. உத்தரவின் பேரில் தேவதானப்பட்டி போலீசார் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×