என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வடமதுரை அருகே மர்ம காய்ச்சலுக்கு இளம்பெண் பலி
Byமாலை மலர்1 Dec 2018 9:49 AM GMT (Updated: 1 Dec 2018 9:49 AM GMT)
வடமதுரை அருகே மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
வடமதுரை:
வடமதுரை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் பருவ நிலை மாற்றம் காரணமாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். காய்ச்சல் கண்டவர்கள் ஆஸ்பத்திரிக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
டெங்கு, பன்றிக்காய்ச்சல் குறித்த செய்திகள் வருவதால் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் பீதியில் உள்ளனர். இந்த நிலையில் வடமதுரை அருகே சித்தூரைச் சேர்ந்த அய்யப்பன் மகள் பாரதி (வயது 20) என்பவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.
கடந்த சில நாட்களாக வீட்டிலேயே வைத்தியம் பார்த்த போது காய்ச்சல் குறையவில்லை. இதனால் இன்று திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே பாரதி பரிதாபமாக உயிரிழந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X