search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போச்சம்பள்ளி அருகே அரிச்சந்திரா கோவிலில் 4 பவுன் நகை- உண்டியல் பணம் கொள்ளை
    X

    போச்சம்பள்ளி அருகே அரிச்சந்திரா கோவிலில் 4 பவுன் நகை- உண்டியல் பணம் கொள்ளை

    போச்சம்பள்ளி அருகே அரிச்சந்திரா கோவிலில் நேற்று இரவு மர்ம நபர்கள் 4 பவுன் நகை மற்றும் உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த பண்ணந்தூர் அருகே பாப்பாரப்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு அரிச்சந்திரா கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. காலையிலும், மாலையிலும் இந்த கோவிலில் பூஜைகள் நடந்து வந்தன.

    நேற்று இரவு பூசாரி சாந்தன் கோவிலை பூட்டிவிட்டு சென்றார். இன்று காலை வந்து பார்த்தபோது கோவிலில் கேட் திறந்து கிடந்தது. அந்த கேட்டில் இருந்த 7 பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தன. சாமி அரிச்சந்திராவின் மனைவி சந்திரமுகி கழுத்தில் கிடந்த 4 பவுன் தாலி செயின் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. மேலும் கோவில் வளாகத்தில் இருந்த 2 உண்டியல்களும் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் மற்றும் சில்லரை காசுகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து பாரூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வந்து விசாரணை நடத்தினர். கோவிலில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் 2 உண்டியல்களும் கிடந்தது. இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது யார்? என்பது குறித்து பாரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளையை நிகழ்த்துவதற்கு முன்பு கொள்ளையர்கள் சாமி கும்பிட்டுவிட்டு அதன்பிறகு சாமி கழுத்தில் இருந்த நகைகளை எடுத்து சென்றது தெரியவந்தது. அவர்கள் சாமி கும்பிட்டதற்கான அடையாளங்களும் அங்கு இருந்தன.
    Next Story
    ×