search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓசூர் கோட்டத்தில் நாளை மின்சாரம் நிறுத்தம்
    X

    ஓசூர் கோட்டத்தில் நாளை மின்சாரம் நிறுத்தம்

    ஓசூர் கோட்டத்தில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
    ஓசூர்:

    ஓசூர் மின் வாரிய செயற்பொறியாளர் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டம் ஓசூர் கோட்டத்தை சேர்ந்த ஓசூர் மின் நகர், ஜுஜுவாடி ஆகிய துணை மின் நிலையங்களில், நாளை(சனிக்கிழமை) அத்தியாவசிய மின் சாதன பராமாப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே, அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை சானசந்திரம், ஒன்னல்வாடி, சானமாவு, தொரப்பள்ளி, கொல்லப்பள்ளி, திருச்சிபள்ளி, பழைய டெம்பிள் அட்கோ, புதிய பேருந்து நிலையம், எம்.ஜி.ரோடு, நேதாஜி ரோடு(பகுதி), சீத்தாராம் நகர், மாருதி நகர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளிலும், ஜுஜுவாடி, மூக்கண்டபள்ளி, பேகேபள்ளி, பேடரபள்ளி, தர்கா, சின்ன எலசகிரி, சிப்காட் ஹவுசிங் காலனி, அரசனட்டி, சிட்கோ பேஸ்-1லிருந்து சூர்யா நகர், பாரதி நகர், எம்.ஜி.ஆர். நகர், காமராஜ் நகர், எழில் நகர், ராஜேஸ்வரி லேஅவுட் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்''.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×