search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் இளம்பெண் தற்கொலை
    X

    மதுரையில் இளம்பெண் தற்கொலை

    மதுரையில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    ராமநாதபுரம் மாவட்டம், கல்லூரணியைச் சேர்ந்தவர் மணியம்மாள். இவரது மகள் மலர்லட்சுமி (வயது 30). இவருக்கும், ராமநாதபுரத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் கணவன் -மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் ரமேஷை விட்டு மலர்லட்சுமி பிரிந்து விட்டார்.

    கவுரிசங்கர் என்பவரை 2-வது திருமணம் செய்த மலர் லட்சுமி ராசாக்கூரில் உள்ள குடியிருப்பில் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

    நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மலர் லட்சுமி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×