search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கஜா புயலால் திருவையாறு பகுதியில் 1000 ஏக்கர் வெற்றிலை சேதம்
    X

    கஜா புயலால் திருவையாறு பகுதியில் 1000 ஏக்கர் வெற்றிலை சேதம்

    கஜா புயல் பாதிப்பால் திருவையாறு பகுதியில் 1000 ஏக்கர் வெற்றிலை சேதம் அடைந்துள்ளது. #gajacyclone #beteldamage

    தஞ்சாவூர்:

    கஜா புயல் கடந்த 16-ந் தேதி நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. இதனால் டெல்டா மாவட்டங்கள் முழுவதும் பலத்த சேதம் அடைந்தன.

    இதில் தஞ்சை மாவட்டத்தில் அதிராம்பட்டினம், மல்லி பட்டினம், பட்டுக்கோட்டை, சேது பாவாசத்திரம், பேராவூரணி, ஒரத்தநாடு ஆகிய பகுதிகளில் மின்கம்பங்கள் மரங்கள் சாய்ந்து மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதியடைந்து வந்தனர். கஜா புயல் பாதிப்பால் தென்னை, வாழை, நெல், கரும்பு மற்றும் தோட்டக்கலை பயிர்களான மக்காச்சோளம், வெற்றிலை ஆகியவையும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

    தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு, பாபநாசம், கண்டியூர், திருப்பூந்துருத்தி, கும்பகோணம் ஆகிய பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட மூலிகை பயிரான வெற்றிலை சாகுபடி ஆயிரம் ஏக்கருக்கு மேல் சாய்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. வெற்றிலை கொடி பயிர் செய்ய 1 ஏக்கருக்கு திராட்சை சாகுபடிக்கு செலவு செய்வது போல் வெற்றிலைக்கும் 5 லட்சம் செலவு ஏற்படுகிறது. அரசு சார்பில் எந்தவிதமான கடன், மற்றும் பயிர் பாதுகாப்பு ஆகியவை இந்த வெற்றிலை சாகுபடிக்கு செய்யப்படுவது இல்லை. அரசு சார்பில் தோட்டக்கலை பயிர்களுக்கு வழங்கும் நிவாரண தொகை போதுமானதாகவும் இல்லை என்று கூறுகின்றனர். இதற்கு குறைந்த பட்சம் ஏக்கருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து திருப்பூந் துருத்தியை சேர்ந்த வெற்றிலை விவசாயி சுகுமார் கூறியதாவது:-

    திருப்பூந்துருத்தி பகுதியில் 2 ஏக்கருக்கு மேல் வெற்றிலை தோட்டம் வைத்திருந்தேன். கஜா புயல் தாக்கியதில் என்னுடைய தோட்டம் முற்றிலும் அழிந்து விட்டது.

    வெற்றிலை கொடி வளர்க்க திராட்சை கொடிக்கு செலவு செய்வது போல செலவாகும். இந்த வருடத்தித்தில் 1 ஏக்கருக்கு ரூ.5 லட்சம் வீதம் 10 லட்சம் செலவு செய்துள்ளேன். தற்போது என்னுடைய வெற்றிலை தோட்டம் சாய்ந்து விட்டதால் வாழ்வாதாரம் முற்றிலும் இழந்து தவித்து வருகிறேன். இதேபோல் எங்கள் பகுதியில் பல வெற்றிலை சாகுபடி விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே அரசு வெற்றிலை பாதிப்புக்கு 1 ஏக்கருக்கு ரூ.2 லட்சம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #gajacyclone #beteldamage

    Next Story
    ×