search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பிரசார வாகனம்- நாராயணசாமி தொடங்கி வைத்தார்
    X

    டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பிரசார வாகனம்- நாராயணசாமி தொடங்கி வைத்தார்

    டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பிரசார வாகனத்தை சட்டசபை வளாகத்தில் முதல்- அமைச்சர் நாராயணசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். #narayanasamy

    புதுச்சேரி:

    புதுவை அரசு சுகாதாரத் துறை சார்பில் டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்த 6 விழிப்புணர்வு பிரசார வாகனங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

    புதுவை பகுதியில் 3, காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியத்திற்கு தலா ஒரு வாகனம் மூலம் 10 நாளைக்கு தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரம் செய்ய உள்ளனர்.

    இந்த பிரசார வாகனத்தை சட்டசபை வளாகத்தில் முதல்- அமைச்சர் நாராயணசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் முதல்- அமைச்சரின் பாராளு மன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை இயக்குனர் ராமன், துணை இயக்குனர் டாக்டர் ரகு நாதன், உதவி இயக்குனர்கள் சுந்தரராஜன், கணேசன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். #narayanasamy

    Next Story
    ×