search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராயக்கோட்டை அருகே கர்நாடக வாலிபர் மர்ம மரணம்
    X

    ராயக்கோட்டை அருகே கர்நாடக வாலிபர் மர்ம மரணம்

    ராயக்கோட்டை அருகே கர்நாடக வாலிபர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அடுத்துள்ள அயர்னப்பள்ளி ஊராட்சிக்குபட்ட நல்லராளபள்ளி பகுதியில் உள்ள முனியப்பன் என்பவர் விவசாய நிலத்தில் மரத்தில் ஒரு வாலிபர் தூக்குபோட்டு பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து அதிரிச்சி அடைந்தனர். 

    இது குறித்து அந்த பகுதியினர் ராயக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது சொட்டு நீர் பாசனம் செய்யும் பைப்பில் வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கியது தெரியவந்தது. 

    இது தொடர்பாக போலீசார் பொதுமக்களிடம் விசாரணை நடத்தியதில் தூக்கில் பிணமாக கிடந்தவர் கர்நாடக மாநிலம், ஆனேக்கல் பகுதியை சேர்ந்த முனிராஜ் (வயது33) என்பது தெரியவந்தது. இவர் ஏலசீட்டு நடத்தி வந்ததும், அவருக்கு கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை நல்லராளபள்ளியை சேர்ந்த ராஜப்பா என்பவரது மகள் பவித்ராவை திருமணம் செய்ததும், அவருக்கு 4 வயதில் எஸ்வந்த் என்ற மகனும், 2 வயதில் தனு என்ற மகனும் உள்ளது என்பது தெரிகிறது.

    தூக்குபோட்டு பிணமாக கிடந்த இடத்தில் அருகில் மதுபாட்டில்கள், ஆசிட் போன்றவைகள் கிடந்தது. பின்னர் முனிராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து ராயக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து முனிராஜ் தற்கொலை செய்தாரா? அல்லது மது அருந்திய போது தகராறு ஏற்பட்டு அடித்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா? என்று பல்வேறு கோணங்களில்  போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.

    தூக்கில் பிணமாக கிடந்த முனிராஜ் முழுவிபரம் குறித்து பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
    Next Story
    ×