search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சங்கரன்கோவில் வாகனம் மோதி முதியவர் பலி
    X

    சங்கரன்கோவில் வாகனம் மோதி முதியவர் பலி

    சங்கரன்கோவில் நடந்து சென்ற முதியவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் புதுமனை 4-வது தெரு பகுதியை சேர்ந்தவர் சங்கரப்பன் (வயது 55). இவர் நேற்று அப்பகுதியில் உள்ள காமாட்சியம்மன் கோவில் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சங்கரப்பன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. 

    இதில் படுகாயமடைந்து மயங்கிய நிலையில் கிடந்தவரை அப்பகுதியில் உள்ளவர்கள் மீட்டு  ஆம்புலன்ஸ் மூலம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 

    சம்பவம் பற்றி சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×