search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூரில் பஸ்சில் பெண்ணிடம் நகை-பணம் அபேஸ்
    X

    திருவாரூரில் பஸ்சில் பெண்ணிடம் நகை-பணம் அபேஸ்

    திருவாரூரில் தனியார் பஸ்சில் பெண்ணிடம் நகை மற்றும் பணத்தை மர்ம நபர் அபேஸ் செய்து தப்பி ஓடி விட்டான். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவாரூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி காந்திமதி. இவர் திருவாரூர் கலெக்டர் அலுவலகத்துக்கு தனியார் பஸ்சில் சென்றார். அப்போது அவர் பையில் வைத்து 2½ பவுன் நகை மற்றும் ரூ.1500 ரொக்கம் ஆகியவற்றை மர்மநபர் அபேஸ் செய்து தப்பி சென்றுவிட்டான். 

    இதுபற்றி அறிந்த காந்திமதி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் ஆன்லைன் மூலம் திருவாரூர் தாலுக்கா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×