என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒகேனக்கல்லில் த.மா.கா. பிரமுகர் வெட்டி கொலை
Byமாலை மலர்29 Nov 2018 10:31 AM GMT (Updated: 29 Nov 2018 10:31 AM GMT)
ஒகேனக்கல்லில் இன்று அதிகாலையில் த.மா.கா. பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முன்விரோதம் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒகேனக்கல்:
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை அடுத்த ஊட்டமலை கிராமத்தில் உள்ள களவுகாடு பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 52).
வட்டார தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரான இவர் தனது விவசாய நிலத்தில் சொந்தமாக மீன் வளர்ப்பு பண்ணை வைத்து நடத்தி வந்தார்.
இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவியும், ரமேஷ் என்ற மகனும் உள்ளனர். ரமேஷ் சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு குழந்தை உள்ளனர்.
கணேசன் தினமும் தனது பண்ணையில் இருந்து மீன்களை ஒகேனக்கல் மீன் மார்க்கெட்டில் சப்ளை செய்வார். இன்று அதிகாலை அவர் வழக்கம்போல் தனது மோட்டார் சைக்கிளில் மீன்களை எடுத்துகொண்டு ஒகேனக்கல் மீன் மார்க்கெட்டிற்கு வந்தார். அப்போது முதலை பண்ணை அருகே வந்தபோது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் 3பேர் கணேசன் வண்டியை வழிமறித்தனர். உடனே அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கணேசனை சரமாரியாக தலையிலும், முகத்திலும் வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் கணேசன் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே இந்த தகவலை ஒகேனக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. ஆனால் நாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இந்த கொலை சம்பவம் குறித்து தகவலறிந்த கணேசனின் மனைவி பழனியம்மாள் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.
கட்சியில் முன்விரோதம் காரணமாக கணேசனை மர்ம நபர்கள் வெட்டி கொன்றனரா? அல்லது பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் வெட்டி கொன்றனரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
த.மா.கா. பிரமுகர் அதிகாலையில் வெட்டி கொன்ற ஒகேனக்கல் பகுதியில் உள்ள வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் பெரும் பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை அடுத்த ஊட்டமலை கிராமத்தில் உள்ள களவுகாடு பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 52).
வட்டார தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரான இவர் தனது விவசாய நிலத்தில் சொந்தமாக மீன் வளர்ப்பு பண்ணை வைத்து நடத்தி வந்தார்.
இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவியும், ரமேஷ் என்ற மகனும் உள்ளனர். ரமேஷ் சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு குழந்தை உள்ளனர்.
கணேசன் தினமும் தனது பண்ணையில் இருந்து மீன்களை ஒகேனக்கல் மீன் மார்க்கெட்டில் சப்ளை செய்வார். இன்று அதிகாலை அவர் வழக்கம்போல் தனது மோட்டார் சைக்கிளில் மீன்களை எடுத்துகொண்டு ஒகேனக்கல் மீன் மார்க்கெட்டிற்கு வந்தார். அப்போது முதலை பண்ணை அருகே வந்தபோது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் 3பேர் கணேசன் வண்டியை வழிமறித்தனர். உடனே அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கணேசனை சரமாரியாக தலையிலும், முகத்திலும் வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் கணேசன் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே இந்த தகவலை ஒகேனக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. ஆனால் நாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இந்த கொலை சம்பவம் குறித்து தகவலறிந்த கணேசனின் மனைவி பழனியம்மாள் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.
கட்சியில் முன்விரோதம் காரணமாக கணேசனை மர்ம நபர்கள் வெட்டி கொன்றனரா? அல்லது பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் வெட்டி கொன்றனரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
த.மா.கா. பிரமுகர் அதிகாலையில் வெட்டி கொன்ற ஒகேனக்கல் பகுதியில் உள்ள வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் பெரும் பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X