search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்செந்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி தெருமுனை கூட்டம்
    X

    திருச்செந்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி தெருமுனை கூட்டம்

    திருச்செந்தூர் அருகே வி.சி. கட்சியின் சமூக நல்லிணக்கப் பேரவை சார்பில் டிசம்பர் 10-ந்தேதி திருச்சியில் நடைபெறும் தேசம் காப்போம் மாநாடு குறித்த விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சமூக நல்லிணக்கப் பேரவை சார்பில் டிசம்பர் 10-ந்தேதி திருச்சியில் நடைபெறும் தேசம் காப்போம் மாநாடு குறித்த விளக்க தெருமுனை கூட்டம் நா.முத்தையாபுரம் அம்பேத்கர் சிலை முன்பு நடைபெற்றது. 

    கூட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் தமிழ்பரிதி தலைமை தாங்கினார்.  ஒன்றிய அமைப்பாளர் சிவன் வரவேற்று பேசினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் சங்கத்தமிழன், இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் விடுதலைச்செழியன், ஒன்றிய பொருளாளர் ராஜேந்திரன், மகளிர் அணி ஜெயதேவி சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    கூட்டத்தில் கருத்தியல் பரப்பு அணி மாநில துணைச்செயலாளர்கள் தமிழ்க்குட்டி, தர்மராஜ் ஆகியோர் விளக்க உரை யாற்றினர். முடிவில் முகாம் செயலாளர் குமார் நன்றி கூறினார்.
    Next Story
    ×