search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் விவசாயி தற்கொலை
    X

    அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் விவசாயி தற்கொலை

    புற்று நோய் பாதிப்பால் விரக்தி அடைந்த விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரியலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அரியலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகே உள்ள ராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 60), விவசாயி. இவரது மனைவி மருதாம்பாள். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். லட்சுமணனுக்கு கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு கால் பகுதியில் கேன்சர் நோய் வந்தது. இதற்காக அவர் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். ஆனால் குணமாகவில்லை. 2 கால்களிலும் வலி அதிகமானது. 

    இதனால் சிகிச்சைக்காக லட்சுமணன் கடந்த 18-ந் தேதி அரியலூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்தார். ஆனால் நோயின் தாக்கம் அதிகமாகி காலில் புண் ஏற்பட்டது. இதனால் அவர் மனவேதனை அடைந்தார். இந்த நிலையில்  நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் லட்சுமணன் சிறுநீர் கழிப்பதற்காக அங்கு உள்ள கழிவறைக்கு சென்றார். பின்னர் தனது காலில் கட்டப்பட்டு இருந்த துணியை அவிழ்த்து அதன் மூலம் ஜன்னலில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இது குறித்து அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். தனக்கு ஏற்பட்டிருந்த புற்று நோயை இனிமேல் சிகிச்சையால் காப்பாற்ற முடியாத என்ற விரக்தியில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

    அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×