என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூரில் மின் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ. 5 லட்சம் மோசடி- வாலிபர் கைது
Byமாலை மலர்28 Nov 2018 11:44 AM GMT (Updated: 28 Nov 2018 11:44 AM GMT)
திருப்பூரில் மின் வாரியத்தில் வேலை வாங்கித்தருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் வீரபாண்டி ஜே.ஜே.நகர் 2-வது வீதியை சேர்ந்தவர் சந்திரசேகர் இவருடைய மகன் யுவராஜ் (23). சந்திரசேகருக்கும், குண்டடம் பகுதியை சேர்ந்த விஜயகுமாருக்கும் (34) பழக்கம் ஏற்பட்டது. அப்போது சந்திரசேகர், விஜயகுமாரிடம், தனது மகன்படித்து விட்டு வீட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதற்கு விஜயகுமார், தனக்கு மின்வாரிய அதிகாரிகள் பழக்கம் உள்ளதாகவும், அதன்மூலம் வேலை வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார். இதை நம்பிய சந்திரசேகரின் மகன் யுவராஜ், முதல் தவணையாக ரூ.2 லட்சம், பின்னர் ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ.5 லட்சத்தை விஜயகுமாரிடம் கொடுத்துள்ளார். அதன்பின்னர் விஜயகுமாரை, யுவராஜால் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதையடுத்து திருப்பூர் வீரபாண்டி போலீசில் யுவராஜ் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை தேடி வந்தனர். இந்த நிலையில் திருப்பூர் கே.செட்டிபாளையம் பகுதியில் விஜய குமார் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து வீரபாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கனிமொழி மற்றும் போலீசார் அங்கு சென்று விஜயகுமாரை கைது செய்தனர்.
அவரிடம் போலீசார் விசாரித்தபோது மின் வாரியத்தில் வேலை வாங்கித்தருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்ததை ஒத்துக் கொண்டார். கைதான விஜயகுமார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். #tamilnews
திருப்பூர் வீரபாண்டி ஜே.ஜே.நகர் 2-வது வீதியை சேர்ந்தவர் சந்திரசேகர் இவருடைய மகன் யுவராஜ் (23). சந்திரசேகருக்கும், குண்டடம் பகுதியை சேர்ந்த விஜயகுமாருக்கும் (34) பழக்கம் ஏற்பட்டது. அப்போது சந்திரசேகர், விஜயகுமாரிடம், தனது மகன்படித்து விட்டு வீட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதற்கு விஜயகுமார், தனக்கு மின்வாரிய அதிகாரிகள் பழக்கம் உள்ளதாகவும், அதன்மூலம் வேலை வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார். இதை நம்பிய சந்திரசேகரின் மகன் யுவராஜ், முதல் தவணையாக ரூ.2 லட்சம், பின்னர் ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ.5 லட்சத்தை விஜயகுமாரிடம் கொடுத்துள்ளார். அதன்பின்னர் விஜயகுமாரை, யுவராஜால் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதையடுத்து திருப்பூர் வீரபாண்டி போலீசில் யுவராஜ் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை தேடி வந்தனர். இந்த நிலையில் திருப்பூர் கே.செட்டிபாளையம் பகுதியில் விஜய குமார் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து வீரபாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கனிமொழி மற்றும் போலீசார் அங்கு சென்று விஜயகுமாரை கைது செய்தனர்.
அவரிடம் போலீசார் விசாரித்தபோது மின் வாரியத்தில் வேலை வாங்கித்தருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்ததை ஒத்துக் கொண்டார். கைதான விஜயகுமார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X