என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கஜா புயல் பாதிப்புக்கு ரூ.76 லட்சம் நிவாரணம்- ராமநாதபுரம் கலெக்டர்
Byமாலை மலர்28 Nov 2018 11:38 AM GMT (Updated: 28 Nov 2018 11:38 AM GMT)
ராமநாதபுரம் மாவட்டம் சார்பில் கஜா புயல் பாதிப்புக்கு ரூ.76 லட்சம் நிவாரணம் வழங்கியதாக கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார். #GajaCyclone
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் கூறியதாவது:-
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயர் துடைக்கும் விதமாக பள்ளிக்கல்வித் துறையின் மூலமாக சேகரிக்கப்பட்ட ரூ.31,60,500 மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் திருவாரூர், நாகை பகுதிகளுக்கு 3 வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடங்கப்பட்ட நிவாரணப்பொருட்கள் சேகரிப்பு மையத்தின் மூலம், மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்களிப்புடன் இதுவரை மொத்தம் ரூ.72,06,010 மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தவிர தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை மொத்தம் ரூ.3,02,900 மதிப்பிலான காசோலை பெறப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டத்திலுள்ள பொதுமக்கள், தன்னார்வலர்கள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு மையத்திற்கு நிவாரணப்பொருட்களை வழங்கி வருகின்றனர்.
அவை அனைத்தும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பாதுகாப்பாக வாகனங்களில் அனுப்பி வைக்கப்படுகிறது என்றார்.
பேட்டியின் போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணபிரான் உள்ளிட்டோர் உடனிருந்தனர். #GajaCyclone
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் கூறியதாவது:-
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயர் துடைக்கும் விதமாக பள்ளிக்கல்வித் துறையின் மூலமாக சேகரிக்கப்பட்ட ரூ.31,60,500 மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் திருவாரூர், நாகை பகுதிகளுக்கு 3 வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடங்கப்பட்ட நிவாரணப்பொருட்கள் சேகரிப்பு மையத்தின் மூலம், மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்களிப்புடன் இதுவரை மொத்தம் ரூ.72,06,010 மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தவிர தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை மொத்தம் ரூ.3,02,900 மதிப்பிலான காசோலை பெறப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டத்திலுள்ள பொதுமக்கள், தன்னார்வலர்கள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு மையத்திற்கு நிவாரணப்பொருட்களை வழங்கி வருகின்றனர்.
அவை அனைத்தும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பாதுகாப்பாக வாகனங்களில் அனுப்பி வைக்கப்படுகிறது என்றார்.
பேட்டியின் போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணபிரான் உள்ளிட்டோர் உடனிருந்தனர். #GajaCyclone
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X