search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனை
    X

    சேலம் மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனை

    சேலம் மத்திய சிறையில் இன்று அதிகாலை போலீஸ் உதவி கமி‌ஷனர் சேகர் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
    சேலம்:

    சேலம் மத்திய சிறையில் 800-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 200-க்கு மேற்பட்டோர் குண்டர் தடுப்பு கைதிகள் ஆவர்.

    இந்த கைதிகளில் பலர் கஞ்சா மற்றும் செல்போன் பயன்படுத்துவதாக எழுந்த புகாரின் பேரில் சிறைத்துறை டி.ஐ.ஜி. அறிவுடை நம்பி மற்றும் சிறை அதிகாரிகள் சோதனை நடத்தி செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை போலீஸ் உதவி கமி‌ஷனர் சேகர் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் சேலம் மத்திய சிறைக்குள் அதிரடியாக புகுந்தனர். பின்னர் அங்குள்ள ஒவ்வொரு அறைகள் மற்றும் ஜெயில் வளாகத்திலும் அங்குலம், அங்குலமாக சோதனை செய்தனர்.

    3 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் ஏதாவது பொருட்கள் சிக்கியதா? என்பது குறித்து போலீசார் கூற மறுத்து விட்டனர்.

    Next Story
    ×