என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் இருந்து சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் 50 கிலோ கஞ்சா சிக்கியது
Byமாலை மலர்28 Nov 2018 9:36 AM GMT (Updated: 28 Nov 2018 9:36 AM GMT)
சென்னையில் இருந்து புறப்பட்ட பெங்களூர் சூப்பர் பாஸ்ட் ரெயிலில் 50 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். #Ganja
ராயபுரம்:
கவுகாத்தியில் இருந்து சென்னை வழியாக பெங்களூர் செல்லும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, இன்று காலை 6.45 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்ட பெங்களூர் சூப்பர் பாஸ்ட் ரெயில் கொருக்குப்பேட்டை ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. ரெயில்வே போலீசார் இந்த ரெயிலில் சோதனை செய்தனர்.
அப்போது ஒரு பெட்டியில் 9 மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர். அதற்கு யாரும் உரிமை கொண்டாடவில்லை.
அவற்றை பிரித்து பார்த்த போது, அதில் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. உடனே போலீசார் அந்த மூட்டைகளை எடுத்துச் சென்றனர்.
அதில் மொத்தம் 50 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் கஞ்சா மூட்டைகள் ஒப்படைக்கப்பட்டன.
சோதனை காரணமாக இந்த ரெயில் அரை மணி நேரம் தாமதமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றது. பயணிகள் ரெயிலில் போலீசார் சோதனை செய்து கஞ்சா மூட்டைகளை எடுத்துச் சென்ற சம்பவம் கொருக்குப் பேட்டை ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கஞ்சா மூட்டைகளை ரெயிலில் கொண்டு வந்தது யார்? எங்கே கொண்டு சென்றனர் என்பது குறித்து போதை தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Ganja
கவுகாத்தியில் இருந்து சென்னை வழியாக பெங்களூர் செல்லும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, இன்று காலை 6.45 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்ட பெங்களூர் சூப்பர் பாஸ்ட் ரெயில் கொருக்குப்பேட்டை ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. ரெயில்வே போலீசார் இந்த ரெயிலில் சோதனை செய்தனர்.
அப்போது ஒரு பெட்டியில் 9 மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர். அதற்கு யாரும் உரிமை கொண்டாடவில்லை.
அவற்றை பிரித்து பார்த்த போது, அதில் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. உடனே போலீசார் அந்த மூட்டைகளை எடுத்துச் சென்றனர்.
அதில் மொத்தம் 50 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் கஞ்சா மூட்டைகள் ஒப்படைக்கப்பட்டன.
சோதனை காரணமாக இந்த ரெயில் அரை மணி நேரம் தாமதமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றது. பயணிகள் ரெயிலில் போலீசார் சோதனை செய்து கஞ்சா மூட்டைகளை எடுத்துச் சென்ற சம்பவம் கொருக்குப் பேட்டை ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கஞ்சா மூட்டைகளை ரெயிலில் கொண்டு வந்தது யார்? எங்கே கொண்டு சென்றனர் என்பது குறித்து போதை தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Ganja
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X