என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டாஸ்மாக் கடையில் ரூ.1 லட்சம் மது பாட்டில்கள் கொள்ளை- மர்ம நபர்கள் துணிகரம்
Byமாலை மலர்27 Nov 2018 4:52 PM GMT (Updated: 27 Nov 2018 4:52 PM GMT)
ராமநாதபுரம் அருகே டாஸ்மாக் கடையில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே உள்ள தேவிபட்டினம் ரோட்டில் பழங்குளம் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு சூப்பர்வைசராக முத்துமாரி என்பவரும், விற்பனையாளராக காட்டூரணியை சேர்ந்த சதீஷ்குமரனும் உள்ளனர்.
சம்பவத்தன்று இரவு இருவரும் வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு சென்று விட்டனர். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
தொடர்ந்து அவர்கள் கடையின் பணம் இருக்கிறதா? என தேடி பார்த்தனர். ஆனால் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து அவர்கள் கடையில் இருந்த 437 மதுபாட்டில்களை திருடிக்கொண்டு தப்பினர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.
மறுநாள் அதிகாலை அந்த பகுதி மக்கள் டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் கேணிக்கரை போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். சூப்பர்வைசர் முத்துமாரி கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
ராமநாதபுரம் அருகே உள்ள தேவிபட்டினம் ரோட்டில் பழங்குளம் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு சூப்பர்வைசராக முத்துமாரி என்பவரும், விற்பனையாளராக காட்டூரணியை சேர்ந்த சதீஷ்குமரனும் உள்ளனர்.
சம்பவத்தன்று இரவு இருவரும் வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு சென்று விட்டனர். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
தொடர்ந்து அவர்கள் கடையின் பணம் இருக்கிறதா? என தேடி பார்த்தனர். ஆனால் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து அவர்கள் கடையில் இருந்த 437 மதுபாட்டில்களை திருடிக்கொண்டு தப்பினர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.
மறுநாள் அதிகாலை அந்த பகுதி மக்கள் டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் கேணிக்கரை போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். சூப்பர்வைசர் முத்துமாரி கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X