என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மின்னல் தாக்கி காயமடைந்த பெண்ணுக்கு ஆர்.டி. ராமச்சந்திரன் எம்எல்ஏ நிதி உதவி
Byமாலை மலர்27 Nov 2018 4:28 PM GMT (Updated: 27 Nov 2018 4:28 PM GMT)
பெரம்பலூர் அருகே மின்னல் தாக்கி காயமடைந்த பெண்ணுக்கு ஆர்.டி. ராமச்சந்திரன் எம்எல்ஏ நிதி உதவி வழங்கினார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் ஆதனூர் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் மனைவி இந்துமதி (வயது 29), அதே ஊரை சேர்ந்த சுந்தரராஜன் மகன் ராஜதுரை (வயது 26). இருவரும் விவசாய கூலி தொழிலாளிகள்.
இருவரும் கொட்டரை நீர் தேக்கம் அருகில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆடு மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது இருவரும் மின்னல் தாக்கி காயமடைந்தனர். இதையடுத்து பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
திருச்சி தனியார் மருத்துவமனையில் இந்துமதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளதை அறிந்த குன்னம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.ராமச்சந்திரன் அவரது குடும்பத்தினரிடம் நலம் விசாரித்து இந்துமதியின் மருத்துவ செலவிற்கு தனது சொந்த செலவில் ரூ.25 ஆயிரம் பணத்தை அவரது குடும்பத்தினரிடம் வழங்கினார். அப்போது மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் குணசீலன், குரும்மாபாளையம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா, குன்னம்பால் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர் மதியழகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பெருமாள் உள்பட பலர் உடனிருந்தனர். #tamilnews
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் ஆதனூர் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் மனைவி இந்துமதி (வயது 29), அதே ஊரை சேர்ந்த சுந்தரராஜன் மகன் ராஜதுரை (வயது 26). இருவரும் விவசாய கூலி தொழிலாளிகள்.
இருவரும் கொட்டரை நீர் தேக்கம் அருகில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆடு மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது இருவரும் மின்னல் தாக்கி காயமடைந்தனர். இதையடுத்து பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
திருச்சி தனியார் மருத்துவமனையில் இந்துமதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளதை அறிந்த குன்னம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.ராமச்சந்திரன் அவரது குடும்பத்தினரிடம் நலம் விசாரித்து இந்துமதியின் மருத்துவ செலவிற்கு தனது சொந்த செலவில் ரூ.25 ஆயிரம் பணத்தை அவரது குடும்பத்தினரிடம் வழங்கினார். அப்போது மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் குணசீலன், குரும்மாபாளையம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா, குன்னம்பால் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர் மதியழகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பெருமாள் உள்பட பலர் உடனிருந்தனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X