search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேவதானப்பட்டியில் 2 குழந்தைகளுடன் பெண்ணை கடத்தி சென்ற வாலிபர்
    X

    தேவதானப்பட்டியில் 2 குழந்தைகளுடன் பெண்ணை கடத்தி சென்ற வாலிபர்

    தேவதானப்பட்டியில் 2 குழந்தைகளுடன் பெண்ணை கடத்திச் சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் தேவதானப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சவரியப்பன். இவரது மனைவி பழனியம்மாள் (வயது 27). இவர்களுக்கு பீலா (7), வீக்னா (3) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். சவரியப்பன் கர்நாடகாவில் தங்கி கூலி வேலை பார்த்து வருகிறார். பழனியம்மாள் தனது 2 குழந்தைகளுடன் தாய் முத்தம்மாள் வீட்டில் தங்கி இருந்தார்.

    சம்பவத்தன்று 2 குழந்தைகளுடன் வெளியே சென்ற பழனியம்மாள் மாயமானார். இது குறித்து அவரது தாய் முத்தம்மாள் தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். தனது புகாரில் அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் (30) என்பவர்தான் தனது மகளை கடத்தி சென்றிருக்க கூடும் என குறிப்பிட்டுள்ளார். அதன் பேரில் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×