என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
நாகர்கோவிலில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை- 2 குழந்தைகள் கதறல்
நாகர்கோவில்:
நாகர்கோவில் கோட்டார் குறுந்தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 35). இவரது மனைவி சீதா (28). இவர்களுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகளும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
வெங்கடேஷ் திருப்பூரில் தங்கி அங்குள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். வெங்கடேசுக்கும், சீதாவுக்கும் குடும்ப தகராறு இருந்து வந்தது. வெங்கடேஷ் தீபாவளி விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்த போதும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வெங்கடேஷ் திருப்பூருக்கு சென்றார். நேற்று அவர், சீதாவிடம் போனில் பேசினார். அப்போதும் அவர்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் சீதா மனம் உடைந்து காணப்பட்டார். நேற்று இரவு தனது குழந்தைகள் 2 பேரையும் தூங்க வைத்தார். பின்னர் நள்ளிரவு குளியலறைக்கு சென்ற அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இன்று காலை தாயாரை காணாமல் 2 குழந்தைகள் கண்ணீர் விட்டு கதறி அழுதன. அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு குளியல் அறையில் சீதா பிணமாக தொங்கினார்.
இதுபற்றி கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ, சப்-இன்ஸ் பெக்டர் அருளப்பன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். சீதா தற்கொலை செய்தது தொடர்பாக விசாரிக்க அவரது கணவர் வெங்க டேசை போலீசார் நாகர்கோவிலுக்கு வருமாறு அழைத்துள்ளனர்.
மேலும் சீதாவுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகளே ஆவதால் அவர் வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்தாரா? என்பது பற்றி ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.
2 குழந்தைகளை தவிக்க விட்டு சீதா தற்கொலை செய்த சம்பவம் கோட்டார் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்