search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகர்கோவிலில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை- 2 குழந்தைகள் கதறல்
    X

    நாகர்கோவிலில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை- 2 குழந்தைகள் கதறல்

    2 குழந்தைகளை தவிக்க விட்டு இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் கோட்டார் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கோட்டார் குறுந்தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 35). இவரது மனைவி சீதா (28). இவர்களுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகளும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

    வெங்கடேஷ் திருப்பூரில் தங்கி அங்குள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். வெங்கடேசுக்கும், சீதாவுக்கும் குடும்ப தகராறு இருந்து வந்தது. வெங்கடேஷ் தீபாவளி விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்த போதும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வெங்கடேஷ் திருப்பூருக்கு சென்றார். நேற்று அவர், சீதாவிடம் போனில் பேசினார். அப்போதும் அவர்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் சீதா மனம் உடைந்து காணப்பட்டார். நேற்று இரவு தனது குழந்தைகள் 2 பேரையும் தூங்க வைத்தார். பின்னர் நள்ளிரவு குளியலறைக்கு சென்ற அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இன்று காலை தாயாரை காணாமல் 2 குழந்தைகள் கண்ணீர் விட்டு கதறி அழுதன. அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு குளியல் அறையில் சீதா பிணமாக தொங்கினார்.

    இதுபற்றி கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ, சப்-இன்ஸ் பெக்டர் அருளப்பன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். சீதா தற்கொலை செய்தது தொடர்பாக விசாரிக்க அவரது கணவர் வெங்க டேசை போலீசார் நாகர்கோவிலுக்கு வருமாறு அழைத்துள்ளனர்.

    மேலும் சீதாவுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகளே ஆவதால் அவர் வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்தாரா? என்பது பற்றி ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.

    2 குழந்தைகளை தவிக்க விட்டு சீதா தற்கொலை செய்த சம்பவம் கோட்டார் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×