search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடலூரில் அதிக வட்டி கேட்டு பெண்ணை மிரட்டிய கும்பல்
    X

    கூடலூரில் அதிக வட்டி கேட்டு பெண்ணை மிரட்டிய கும்பல்

    கூடலூரில் அதிக வட்டி கேட்டு பெண்ணை மிரட்டிய கும்பல் மீது மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் மந்தையம்மன் கோவில் தெருவைச்சேர்ந்த லெனின் மனைவி பிரியா(வயது28). இவருக்கு கூடலூரைச் சேர்ந்த முத்தையா மனைவி லதா, பாண்டியன் மனைவி சரண்யா, ராஜா மனைவிபோதுமணி, பரமன் மனைவி சிங்காரம் உட்பட 15 பெண்கள் மற்றும் சேகர், ஜெயக்குமார் ஆகியோர் ரூ. 10 லட்சம் வரை வட்டிக்கு கொடுத்தனர்.

    பின்னர்அதிக வட்டி கேட்டு பிரச்சினை செய்துள்ளனர். மேலும் பிரியாவின் வீட்டிற்குள் அத்துமீறி சென்று கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து பிரியா கடந்த சிலநாட்களுக்கு முன் தேனி போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் கொடுத்தார். அவரது உத்தரவின் பேரில் கூடலூர் வடக்கு சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் அதிக வட்டி கேட்டு பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 17 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×