search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 30 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும்- பொன்.ராதாகிருஷ்ணன்
    X

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 30 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும்- பொன்.ராதாகிருஷ்ணன்

    தமிழகத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் 30-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாரதிய ஜனதா வெற்றி பெறுவது உறுதி என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #BJP #PonRadhakrishnan #ParliamentElection
    நாகர்கோவில்:

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் அஞ்சுகிராமம் அருகே உள்ள கனகப்பபுரத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கஜா புயல் நிவாரண நிதி தொடர்பாக டெல்லியில் மத்திய மந்திரி அருண் ஜெட்லியை சந்தித்து பேசி உள்ளேன். மத்திய குழு ஆய்வை முடித்துவிட்டு ஆய்வறிக்கையை சமர்ப்பித்த பிறகு அது தொடர்பாக மந்திரி சபை கூடி முடிவெடுக்கும்.


    தமிழகத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் 30-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாரதிய ஜனதா வெற்றி பெறுவது உறுதி. தற்போது உள்ள காலம் கூட்டணி காலம். அ.தி.மு.க. தொடங்கிய காலம் முதல் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்தித்ததே இல்லை. இதேபோல் தி.மு.க.வும் கூட்டணி அமைத்து தான் தேர்தலை சந்தித்து வருகிறது.

    தமிழகத்தில் கூட்டணிக்கு பழக்கப்பட்டுள்ளனர். வேறு மாநிலங்களில் இந்த நிலை இல்லை. கழகங்கள் இல்லாத தமிழகத்தை நாம் கண்டாக வேண்டும். அது வந்தால் தான் தமிழகத்தில் உச்சக்கட்ட வளர்ச்சியை காண முடியும். ஒவ்வொரு தமிழனும் இதை உணர வேண்டும்.

    அதே நேரத்தில் இன்றைய கால கட்டத்தில் தேர்தல் சூழல் என்பது கூட்டணி இல்லாமல் முடியாது. காங்கிரஸ் கட்சியை ஒழிக்க வந்த கட்சி தி.மு.க. ஆனால் அவர்களுடன் தான் தி.மு.க. கூட்டணி வைத்தது. தற்போது தமிழகத்தில் கூட்டணி சேர்ந்து தான் தேர்தலை அணுக வேண்டும் என்ற நிலையில் தான் அனைத்து கட்சிகளும் உள்ளன.

    பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி இருக்கும் வரை பெட்ரோல் விலை குறைந்து கொண்டே இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #PonRadhakrishnan #ParliamentElection
    Next Story
    ×