search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூரில் மன்னார்குடி கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
    X

    திருவாரூரில் மன்னார்குடி கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

    கஜா புயல் காரணமாக பள்ளிகளில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதால் திருவாரூரில் உள்ள மன்னார்குடி கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். #GajaCyclone #Mannargudi
    திருவாரூர்:

    கஜா புயலால் திருவாரூர் மாவட்டம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்ததற்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மறுசீரமைப்பு பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை.

    இந்நிலையில், புயல் சீரமைப்பு பணி காரணமாக மன்னார்குடி கல்வி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் அறிவித்துள்ளார்.
     
    கஜா புயலால் பாதிக்கப்பட்டு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டு உள்ளதால் விடுமுறை அளிக்கப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார். #GajaCyclone #Mannargudi
    Next Story
    ×