search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊருக்குள் சென்று புயல் சேதத்தை பார்வையிட வேண்டும் என்பதற்காக மக்கள் மறிக்கிறார்கள் -  ராஜேந்திர பாலாஜி
    X

    ஊருக்குள் சென்று புயல் சேதத்தை பார்வையிட வேண்டும் என்பதற்காக மக்கள் மறிக்கிறார்கள் - ராஜேந்திர பாலாஜி

    ஊருக்குள் சென்று புயல் சேதத்தை பார்வையிட வேண்டும் என்பதற்காக மக்கள் மறிக்கிறார்கள் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். #Gajastorm #MinisterRajendraBalaji

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தங்கியிருந்து நிவாரண பணிகளை பார்வையிட்டு துரிதப்படுத்தி வருகிறார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நான் சென்ற டெல்டா மாவட்ட பகுதிகளில் கஜா புயலால் கடும்சேதம் ஏற்பட்டிருக்கிறது, தென்னை தேக்கு மா, பலா, வாழையென, விவசாயிகள், எல்லாவற்றையும், இழந்து வீடு-வாசல்களை, இழந்து பரிதவிக்கிறார்கள், உலகத்திற்கே, உணவளித்தவர்கள், உணவுக்காக, ஏங்க வைத்திருக்கிற, இந்த பேரிடரை, எதிர்கொள்ள எல்லா உதவிகளையும், இந்த அரசு செய்து வருகிறது, ஆங்காங்கே மக்கள், மறிக்கிறார்கள் என்றால், எங்களை எதிர்த்து அல்ல.


     

    நாங்கள் ஊருக்குள் சென்று சேத பகுதிகளை பார்க்கவேண்டும், ஆறுதல் சொல்ல வேண்டும் என்றுதான் அழைக்கிறார்கள், வெளி மாவட்டங்களில் இருந்து, பணியாளர்களும், அதிக அளவில் பணியில், ஈடுபட்டு, தற்போது மின் வினியோகம், குடிநீர் வினியோகம், சீராகி வருகிறது, நான் என் வாழ்நாளில், பார்த்த பெரும் புயல் இது தான். நாகையிலே தொடங்கி, தேனி கம்பம், கொடைக்கானல் மலைவரை, கடுமையாக தாக்கி பேரழிவை தந்திருக்கிறது.

    கஜா புயல் நிவாரண பணிகள் மந்தகதியில் நடைபெறுவதாக, தினகரன் குற்றச்சாட்டு வருவது சரியானதல்ல. இதில் அரசியல் செய்வது தேவையற்றது, மிகப்பெரிய இழப்பை சந்தித்திருக்கும் டெல்டா மக்களுக்கு, எல்லோரும் சேர்ந்து உதவுதே இப்போதுள்ள பணி. மத்தியகுழுவினர், இன்று திருவாரூர் பகுதியை பார்வையிடுகிறார்கள், மத்திய அரசும், மக்களின் துயரை போக்க அதிக நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Gajastorm #MinisterRajendraBalaji

    Next Story
    ×