search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராசிபுரம் அருகே விபத்து - தொழிலாளி பலி
    X

    ராசிபுரம் அருகே விபத்து - தொழிலாளி பலி

    ராசிபுரம் அருகே விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராசிபுரம்:

    ராசிபுரம் அருகே உள்ள அத்தனூர் ஆலாங்காட்டு புதூர் பாரதிநகரைச் சேர்ந்தவர் சின்னுசாமி. இவரது மகன் ரமேஷ் (35) கூலி தொழிலாளி. இவர் நேற்று இரவு ராசிபுரம் அருகேயுள்ள சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆட்டையாம்பட்டி பிரிவு ரோடு அருகே சென்றபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் சென்றுவிட்டது.

    இதில் சம்பவ இடத்திலேயே ரமேஷ் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி வெண்ணந்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×