search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோட்டில் பதுங்கி இருந்த இரிடியம் புரோக்கர்கள் 3 பேர் கைது
    X

    ஈரோட்டில் பதுங்கி இருந்த இரிடியம் புரோக்கர்கள் 3 பேர் கைது

    ஈரோட்டில் பதுங்கி இருந்த இரிடியம் புரோக்கர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு முத்தம்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் இரிடியம் புரோக்கர்கள் 3 பேர் பதுங்கி இருப்பதாக ஈரோடு தாலுகா போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் முத்தம்பாளையத்துக்கு விரைந்து சென்றனர். குறிப்பிட்ட அந்த வீட்டுக்குள் போலீசார் சென்றனர்.

    அப்போது அந்த வீட்டிற்குள் 3 பேர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் போலீசாரிடம் முன்னுக்குப்பின் முரணாக பேசினர்.

    இதையடுத்து 3 பேரையும் தாலுகா போலீசார் விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    விசாரணையில் அவர்கள் 3 பேரும் ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டை சேர்ந்த தவபாண்டியன் (வயது 29), திட்டக்குடியை சேர்ந்த திருநாவுக்கரசு (28), திருவண்ணாமலையை சேர்ந்த முகமதுசெரீப் (28) என்பது தெரியவந்தது.

    இவர்களில் தவபாண்டியன் வெள்ளோட்டில் சொந்தமாக ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது சொந்த மாவட்டம் மதுரை என கூறப்படுகிறது. 3 பேரும் இரிடியம் புரோக்கர்கள் என்பது விசாரணையில் வெட்ட வெளிச்சமானது.

    இதையடுத்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தவபாண்டியன், திருநாவுக்கரசு, முகமது செரீப் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தபட்டு ஈரோடு கிளை ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    திருநாவுக்கரசு, முகமது செரீப், தவபாண்டியன் ஆகிய 3 பேரும் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களிடையே பழக்கம் ஏற்பட்டது.

    3 பேரும் இணைந்து தொழிலதிபர்களை சந்தித்து ‘‘எங்களிடம் இரிடியம் உள்ளது. இதை வீட்டில் வைத்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும்‘‘ என்று ஆசைவார்த்தை கூறி அவர்களை மூளைச்சலவை செய்து வந்துள்ளனர்.

    இவர்களது ஆசை வார்த்தையில் ஏராளமான தொழிலதிபர்கள் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    கைதான 3 பேருக்கும் பின்னால் ஒரு பெரிய நெட் ஒர்க் இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.எனவே அது பற்றிய விசாரணையில் போலீசார் இறங்கி உள்ளனர்.

    Next Story
    ×