search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குன்னம், பெரம்பலூர் தொகுதியில் பாமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
    X

    குன்னம், பெரம்பலூர் தொகுதியில் பாமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

    குன்னம், பெரம்பலூர் தொகுதி நிர்வாகிகள் பா.ம.க. ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. #pmk
    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில் குன்னம், பெரம்பலூர் தொகுதி நிர்வாகிகள் பா.ம.க. ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டதலைவர் ராம.மருதவேல் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மாநில துணை பொதுசெயலாளர் - வன்னியர் சங்க மாநில செயலாளர் வைத்திலிங்கம் கலந்து கொண்டார்.

    மாநில துணை தலைவர் அனுக்கூர் ராஜேந்திரன், கண்ணபிரான், மதுரா செல்வராஜ், மற்றும் அரியலூர் மாவட்ட செயலாளர் கண்ணன் , மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் செல்லரவி  மற்றும் உழவர் பேரியக்க நிர்வாகிகள் கோடங்குடி ராஜேந்திரன், ரவி, மாநில செயற்குழு உறுப்பினர். அன்புச்செல்வன், செல்வகடுங்கோ, மாநில மாணவர் அணி துணை தலைவர் பிரபு,  பேச்சாளர் தமிழ் இனியன் மற்றும் மாவட்ட, மாநில, ஒன்றிய நிர்வாகிகள் 200க்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில்  குன்னம் கண்ணதாசன் நன்றி கூறினார்.

    கூட்டத்தில் மழவராய நல்லூர் கிராமத்தில் இருதரப்பினர் மோதல் விவகாரத்தில், ஒருவரை கைது செய்த மங்களமேடு போலீசார்   லஞ்சம் பெற்றுக்கொண்டு பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளனர். எனவே போலீசாரை கண்டித்து வருகிற 26-ந்தேதி பெரம்பலூர் ஆர்.சி. அருகே போராட்டம் நடத்துவது, வருகிற 25-ந் தேதி சென்னையில் நடைபெறும் மகளிர் மாநாட்டில் பெரம்பலூர் - அரியலூர் மாவட்டத்தில் உள்ள 200 பொறுப்பாளர்களும் கலந்து கொள்ள வேண்டும்,  கட்சி அணைத்து நிலை பொறுப்பாளர்களும் அன்புமணி ராமதாசை முதல்வர் ஆக்கும் வரை பாகுபாடு இன்றி பணியாற்ற வேண்டும் என்பது உள்பட  பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. #pmk
    Next Story
    ×