என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மயிலம் பகுதியில் பலத்த மழை: கோவில்-வீடுகளில் தண்ணீர் சூழ்ந்தது
Byமாலை மலர்22 Nov 2018 2:21 PM GMT (Updated: 22 Nov 2018 2:21 PM GMT)
மயிலம் மற்றும் கன்னிகாபுரம் போன்ற பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய மழை கொட்டியது. இதனால் கன்னிகாபுரத்தில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது.
மயிலம்:
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. மயிலம் மற்றும் கன்னிகாபுரம் போன்ற பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய மழை கொட்டியது.
இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இன்று காலையும் பலத்த மழை பெய்தது.
கன்னிகாபுரத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே வாய்க்கால் செல்கிறது. அந்த வாய்க்கால் கரையோரம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் தண்ணீர் செல்ல முடியாமல் தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் கரைபுரண்டு ஓடி வயல் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
இதனால் கன்னிகா புரத்தில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. மேலும் அந்த பகுதியில் உள்ள செல்வசக்தி முத்துமாரியம்மன் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் பல்வேறு தெருக்களிலும் மழைநீர் ஆறாக ஓடியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X